கோட்டாவை குழிக்குள் தள்ளியவர்கள் ரணிலுக்கு குழி பறிக்கின்றனர்!

0
317

கோட்டாபய சாய வாளியில் விழுந்த நரி என கூறிய போது பலரும் அதை நம்பவில்லை. கோட்டாபாய முட்டாள்தனம் பற்றிய ஒரு புராணக்கதையைக் கூறினர்.  ஆனால் மக்கள் அதனையும் நம்பவில்லை.

ஆனால் ஒரு சம்பவத்தால் கோதட்டாவின் சாயம் கழுவப்பட்டது. பொருளாதார நெருக்கடியால்  கொதிப்படைந்த மக்களை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் கோட்டா. ஆனால் மக்கள் கோட்டாவின் ஊரடங்குச் சட்டத்தை ஒரு பைசாவிற்கும்  கணக்கிலெடுக்கவில்லை. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கோட்டா செல்லாத நாணயமாக மாறினார். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது கோட்டா செய்த பெரிய தவறு.

கோட்டாவின் தவறுகளை ரணில் மீண்டும் செய்துள்ளார். ரணில், வர்த்தமானி மூலம் கொழும்பின் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த கால போராட்ட களமாக இருந்த காலி முகத்திடல் மைதானம் உயர் பாதுகாப்பு வலயமாக மாறியுள்ளது.

மக்கள் சக்தி தூங்கும் சிங்கம் போன்றது. மக்கள் சக்தி விழித்துக் கொண்டால், எந்த ராணுவமும் அதைக் கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாட்டின் அரசாங்கமும் இராணுவமும் மக்கள் சக்தியைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் சாத்தியமற்றது. குறிப்பாக ஐ.நா சட்ட கட்டமைப்பின் கீழ் குற்றங்கள் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவம் அதனை ஒருபோதும் செய்ய முடியாது.

அதன்படி மக்கள் காலி முகத்திடல் களத்தை ஆக்கிரமித்தால் ரணிலின் அதிகாரம் பறிபோய்விடும்.

மேலும் உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்த ரணிலின் வர்த்தமானி நீதிமன்றில் சவால் செய்யப்படலாம். காலி முகத்திடல் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக இருந்தால், முன்பகுதி காணியை செங்ரிலாவிற்கு இலங்கை விற்றது சிக்கலாகும்.

உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியில் ரணில் கையெழுத்திட்டாலும் அது பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரை. கோட்டாபாயவை அழித்த பாதுகாப்பு அதிகாரிகள் என்று சொல்லப்படுபவர்கள் இப்போது ரணிலை புதைக்க குழி பறிக்கின்றனர்.  இதுவே இறுதியில் வரக்கூடிய முடிவாகும்.

பொருளாதார நெருக்கடியை கிளர்ச்சியால் தீர்க்க முடியாது அதுபோலவே  ராணுவத்தாலும் தீர்க்க முடியாது.